மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சிக்கு செல்லும்.
இத்தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சிக்கு செல்லும் எனவும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வைத்தியர்களின் தேவைகளைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments powered by CComment