counter create hit இதுவரை 4,172 டெங்கு நோயாளர்கள்

இதுவரை 4,172 டெங்கு நோயாளர்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள்.
2023 ஜனவரி இரண்டாவது வாரத்தில் மொத்தம் 2,030 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் 452 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 417 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 257 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 123 பேரும், கல்முனை மாவட்டத்தில் 107 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 103 பேரும் டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரை 4,172 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula