இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துள்ளது. அமைச்சர்களாக உறுதி மொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் வருமாறு;
சுசில் பிரேமஜயந்த - கல்வி
விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
டிரான் அலஸ் - பொது பாதுகாப்பு
கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ரமேஷ் பத்திரண- பெருந்தோட்டம்
நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து
நளின் பெர்னாண்டோ - வர்த்தகம்
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி
மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இவர்களில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அரசுடன் இணைந்து கொண்டமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
Comments powered by CComment