நாளை முதல் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை நிறுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக மே 5ஆம் திகதியான இன்று குடியகல்வு தினைக்களத்தில் ஏற்பட்ட கணினிக் கோளாறினால் கடவுச்சீட்டுகளை வழங்குதல் மற்றும் புதுப்பிக்கக்கூடியது நிறுத்தப்பட்டதுடன் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் மற்றும் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும் சேவைகள் நிறுத்தப்பட்டன.
விமான நிலையச் செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கண்டி மற்றும் கொழும்பில் உள்ள பத்தரமுல்ல கடவுச்சீட்டு அலுவலகங்களில் மக்கள் தமது கடவுச்சீட்டைக் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments powered by CComment