counter create hit கொரோனா தொற்றாளர்கள், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுதர்ஷினி

கொரோனா தொற்றாளர்கள், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுதர்ஷினி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும், கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

கம்பஹாவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 28 வீதத்தினால் அதிகரித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தற்போதும் கண்டுபிடிக்கப்படுவதால் இந்த அதிகரிப்பு காணப்படுகின்றது. அடுத்த வாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையும் வாய்ப்புள்ளது.” என்றுள்ளார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula