ராயல் கனடிய கடற்படையின் டைவர்ஸ்; தங்கள் இறுதி ஆண்டுப் பயிற்சியை முடித்தபோது, அவர்கள் நிகழ்வை நினைவுகூர ஒரு சிறப்பு வழியைத் தேடிக்கொண்டிருந்தனர்.
அப்போதுதான் நீருக்கடியில் வகுப்பு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக, கடற்படையின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராகவும் முதலாம் ஆண்டு மாணவியாகவும் செயல்படும்; வலேரி லெக்லேர் அந்த சவாலை எதிர்கொண்டார்.
பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள்; புகைப்படவியளார் - அனைவரும் குளத்தில் குதித்து இரண்டு வரிசைகளில் நிற்க முயற்சித்தனர். முன்னால், சிறிது அலங்காரத்தை சேர்ப்பதற்காக ஒரு பழங்கால டைவிங் பெல் வைக்கப்பட்டது. பின்னால் எழுத்துக்கள் உள்ள நீல வண்ண கொடி வைக்கப்பட்டது.
ஆனால், நிச்சயமாக, நீருக்கடியில் இந்த குழு புகைப்படத்தை எடுப்பது என்பது மிகவும் சவாலாக மாறியது. முன்வரிசையில் உள்ளவர்கள் நாற்காலியில் அமர்வது கடினமாக இருந்ததாம்.
நீரில் மேலே மிதப்பதை எதிர்த்துப் போராட, ஒவ்வொருவரும் 8-பவுண்டு எடையை தங்கள் பைகளில் வைத்துள்ளனர். ஆனால் அது மட்டுமல்ல. முன் வரிசையில் இருந்த பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே நாற்காலிகளுக்கு கீழே ஆக்ஸிஜன் தொட்டிகளை வைத்திருந்தனர். போஸ் கொடுக்க முயலும் போது பின்னால் இருந்த மாணவர்கள் மூச்சை அடக்க வேண்டியதாயிற்று.
நீங்கள் கற்பனை செய்வது போல, இறுதி ஷாட்டைப் பெறுவது நிறைய சோதனைகளை கொடுத்தது.
இறுதியில், சுமார் ஒரு டஜன் புகைப்படங்களுக்குப் பிறகு, LeClair நல்லதொரு புகைப்படத்தைப் பெற்றார். ஆனால் புகைப்படத்தில் உள்ளவர்களின் வேலை முடிந்துவிட்ட நிலையில், புகைப்படம் சரியாக வருவதற்கு LeClair பல மணிநேரம் கணனி முன்பு செலவிட்டுள்ளார். புகைப்படத்தில் இருந்த அனைத்து குமிழ்களையும் உன்னிப்பாக அகற்றி சரிபடுத்தியுள்ளார்.
இறுதியில், அனைத்து முயற்சிகளும் மதிப்புக்குரியவை. நீருக்கடியில் வெடிமருந்துகளைக் கண்டுபிடித்து நடுநிலையாக்குவது போன்ற திறன்களைக் கற்றுக்கொள்வதற்குப் பயிற்சியளிக்கும் இந்த திறமையான டைவர்ஸ் - அவர்களின் திறமைக்கு தகுதியான ஒருபட்டதாரிகள் புகைப்படம்தான்.
Source : mymodernmat
Comments powered by CComment