counter create hit ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அடுத்து, கௌதம் கார்த்திக் நடித்த‘வை ராஜா வை;’ படத்தை இயக்கினார். இந்தப் படம் 2015 வெளியானது. சமீபத்தில் ‘முசாபிர்’ என்ற தனியிசை ஆல்பத்தை உருவாக்கினார். இந்த ஆல்பம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியானது. தமிழில், இந்த ஆல்பத்துக்கு ‘பயணி’ என்று தலைப்பு வைத்திருந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திப் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். படத்துக்கு, ‘ஒ சாதி சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை மீனு அரோரா தயாரிக்கிறார். இவர், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘ஜூண்ட்’ என்ற படத்தைத் தயாரித்தவர்.

இதையடுத்து ‘கடந்த ஏழு வருடங்களாக திரைப்படம் இயக்காமல் அதிலிருந்து விலகி இருந்தது ஏன்?’என்தற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் தந்திருக்கிறார். “என்னுடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற காரணத்துக்காக தொடர்ந்து படம் இயக்கவில்லை. அவர்கள் இப்போது வளர்ந்து ஆளாகிவிட்டார்கள். அதனால் மீண்டும் படம் இயக்க வந்துவிட்டேன். ஏழு வருடத்திற்குப் பிறகு மீண்டும் படம் இயக்க வந்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் இளையராஜாவை இவர் சந்தித்ததையோட்டி, அவர் இந்த இந்திப் படத்துக்கு இசையமைக்கலாம் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula