counter create hit நயன்தாராவுடன் சமாதானம் பேசும் ஷாரூக் நிறுவனம்!

நயன்தாராவுடன் சமாதானம் பேசும் ஷாரூக் நிறுவனம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜயை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் அட்லீ. ஷங்கரின் உதவியாளரான இவரது ஊதியம் 13 கோடி ரூபாய்.

தற்போது அட்லி பாலிவுட்டில் தன்னுடைய முதல் படத்தை இயக்குகிறார். அதில் ஷாருக்கான் கதாநாயகனாகவும் நயன் தாரா முதன்மை நாயகியாகவும் நடிக்கிறார்கள் என்று அட்லி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.‘லயன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட இப்படத்தில் ஷாரூக் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதனால் ஷாரூக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சான்யா மல்ஹோத்ரா ஆகிய இருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள் என்பதையும் உறுதி செய்திருந்தனர். அதேபோல் யோகி பாபு, பிரியாமணி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது. நடிகை நயன்தாராவும் பிரியாமணியும் படப்பிடிப்புகளில் பங்கேற்றப் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில், திடீரென இப்படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்தன. ஏன் நயன் தாரா விலக வேண்டும் என்று இயக்குநர் தரப்பில் கேட்டபோது அங்கிருந்து பதில் இல்லை. இந்நிலையில் நயந்தாரா தரப்பில் விசாரித்தபோது தகவல்கள் கிடைத்தன.

ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை ஆனார். இதனால், அக்டோபர் மாதம் முழுக்க ஷாருக்கானால் அட்லீ பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நயன்தாரா, ‘பிரேமம்’ இயக்குநரின் புதிய படம், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’,ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப் படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

அக்டோபர் மாதம் அட்லீ படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி இருந்தார் நயன்தாரா. ஆனால், ஆர்யன் கானால் ஏற்பட்ட சர்ச்சையால் படப்பிடிப்பு நடைபெறாததால், நயன்தாராவின் தேதிகள் வீணாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மீண்டும் அட்லீ படப்பிடிப்பு துவங்கினாலும் வெவ்வேறு படங்களுக்கு நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளதால், அப்படங்களில் நடித்தே ஆகவேண்டிய நெருக்கடியில் நயன்தாரா இருக்கிறார். இந்தக் காரணங்களைச் சொல்லித்தான் நயன்தாரா, ஷாருக் படத்திலிருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஷாரூக் கான் சார்பில் நயன் தாரா தரப்பில் சமாதானம் பேசப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். நயன் தாரா மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டால், சான்யா மல்ஹோத்ராவுக்கு முழு ஊதியத்தையும் கொடுத்துவிட ஷாரூக் கான் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக இயக்குநர் தரப்பில் கூறுகின்றனர்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.