“மாகாண சபைத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும். தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
இலங்கை
ஊடகவியலாளர்கள் கொலை, கடத்தல் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்: பொலிஸ்மா அதிபர்
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல், தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
சஜித்துக்கும் நவீனுக்கும் துடுப்பாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்: ரஞ்சன் ராமநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியை முன்னின்று வழிநடத்துவதற்கான வாய்ப்பை சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்வது ஆபத்தானது; ஆதரவளிக்க மாட்டோம்: விமல் வீரவங்ச
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது நாட்டுக்கு ஆபத்தானது. ஆகவே, நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கக் கோரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை கைவிடுங்கள்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் வேண்டுகோள்!
“முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள்.” என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் கைவிடப்பட்ட குளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரணைதீவு காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் படகுகளில் சென்று கவனயீர்ப்புப் போராட்டம்!
கிளிநொச்சி, இரணைதீவிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை இரணைதீவுக் கரைக்கு படகுகளில் சென்று இன்று திங்கட்கிழமை முன்னெடுத்தனர்.